ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்முகாஷ்மீர் மாநிலம் குரோஸ் செக்டார் பகுதியில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். பனி படர்ந்த பகுதியில் விமானம் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை